Latestமலேசியா

‘ஸ்டீம்போட்’ சமையல் உபகரணம் வெடித்தது ; தெமர்லோவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவர் காயம்

தெமர்லோ, மார்ச் 20 – பஹாங் தெமர்லோவில், ஒரே குடும்பத்தை சேர்ந்த எழுவரின், இரவு உணவு சோகத்தில் முடிந்தது.

அதற்கு, அவர்கள் சென்றிருந்த உணவகத்தில், “ஸ்டீம்போட்” சமைப்பதற்கான கையடக்க எரிவாயு அடுப்பு திடீரென வெடித்ததே காரணம் ஆகும்

அச்சம்பவம் இம்மாதம் ஏழாம் தேதி, இரவு மணி ஏழு வாக்கில் நிகழ்ந்தது.

53 வயது நோரைனி அப்துல்லா, தனது கணவர், நான்கு பிள்ளைகள் மற்றும் மருமகனுடன் உணவருந்த “ஸ்டீம்போட்” உணவகம் ஒன்றில் நிகழ்ந்தது.

திடீரென வெடித்த ஸ்டீம்போட் அடுப்பிலிருந்து, வெளியான தீப்பொறி பட்டதில், நோரைனியும் அவரது குடும்பத்தாரும் காயமடைந்தனர்.

குறிப்பாக, முகத்திலும், கைகளிலும் மோசமான தீப்புண் காயங்களுக்கு இலக்கான நோரைனின் கணவரும், இரண்டாவது மகனும், நான்கு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறியுள்ளார்.

அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட “ஸ்டீம்போட்” உணவக உரிமையாளர் மன்னிப்புக் கோட்டுக் கொண்டுள்ள வேளை ; அது தொடர்பில், போலீஸ் புகார் ஒன்றும் செய்யப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!