Latestமலேசியா

இம்மாதம் தொடங்கி இவ்வாண்டு முழுவதிலும் ரஹ்மா ரொக்க நிதிக்கு மனுச் செய்ய முடியும் – அன்வார்

கோலாலம்பூர், நவ 3 – இம்மாதம் தொடங்கி இவ்வாண்டு முழுவதிலும் ரஹ்மா ரொக்க உதவித் தொகைக்கு மனுச் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அந்த உதவித் திட்டத்திற்கான விண்ணப்பம் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக இது இருப்பதாக பிரதமர் கூறினார். நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி ரஹ்மா ரொக்க உதவித் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 5.2 மில்லியன் மக்கள் ரஹ்மா ரொக்க உதவித் தொகையை 100 ரிங்கிட் முதல் 1,200 ரிங்கிட்வரை பெறுவார்கள். முறையீடு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஒரே தடவையாக 100 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை பெறுவார்கள் என அன்வார் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!