கோலாலம்பூர், நவ 3 – இம்மாதம் தொடங்கி இவ்வாண்டு முழுவதிலும் ரஹ்மா ரொக்க உதவித் தொகைக்கு மனுச் செய்வதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இதற்கு முன் ஒரு ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே அந்த உதவித் திட்டத்திற்கான விண்ணப்பம் இருந்ததை அவர் சுட்டிக்காட்டினார். ரஹ்மா ரொக்க உதவித் திட்டத்தை மேம்படுத்தும் நடவடிக்கையாக இது இருப்பதாக பிரதமர் கூறினார். நவம்பர் 7 ஆம் தேதி தொடங்கி ரஹ்மா ரொக்க உதவித் தொகை வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 5.2 மில்லியன் மக்கள் ரஹ்மா ரொக்க உதவித் தொகையை 100 ரிங்கிட் முதல் 1,200 ரிங்கிட்வரை பெறுவார்கள். முறையீடு விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஒரே தடவையாக 100 ரிங்கிட் முதல் 2,500 ரிங்கிட் வரை பெறுவார்கள் என அன்வார் தெரிவித்தார்.
Related Articles
கோலா குபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தல்; பக்காத்தான் ஹரப்பான் வேட்பாளராக DAPயின் Pang Sock Tao போட்டி
4 hours ago
“நாங்கள் எதிர்ப்போம்”; Tik Tok தடை செய்யும் மசோதாவில் ஜோ பைடன் கையெழுத்திட்டதிற்கு டிக் டோக் தலைமை நிர்வாக அதிகாரி பதில்
4 hours ago
Check Also
Close