Latestமலேசியா

காதலியுடன் பழக வேண்டாம் என கூறிய தாயையும், சகோதரனையும்; பாராங் கத்தி கொண்டு தாக்கிய இளைஞன் கைது

கோலாலம்பூர், நவம்பர் 20 – காதலியுடன் பழக வேண்டாம் என கூறிய தனது தாயையும், சகோதரனையும் பாராங் கத்தியை கொண்டு தாக்கிய 19 வயது பதின்ம வயது இளைஞன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.

கடந்த புதன்கிழமை, நவம்பர் 15-ஆம் தேதி, இரவு மணி ஏழு வாக்கில் அவன் கைதுச் செய்யப்பட்டதை, அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் ACP முஹமட் அஜாம் இஸ்மாயில் உறுதிப்படுத்தினார்.

தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பாராங் கத்தி ஒன்றும் அவனிடனிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இம்மாதம் முதலாம் தேதி, அம்பாங், பண்டான் ஜெயாவிலுள்ள, வீடொன்றில் அவன் அந்த 25 அங்குலம் கத்தியை கொண்டு, தனது 26 வயது சகோதரரின் வலது காலை காயப்படுத்திய வேளை ; தாயை வெட்டுவதற்காக துரத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

அதனால், அப்பெண் அண்டை வீட்டில் தஞ்சம் புகுந்து அவனிடமிருந்து தப்பியுள்ளார்.

வேலை இல்லாத அந்த இளைஞனுக்கு எதிராக ஐந்து பழைய குற்றப்பதிவுகள் இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணைக்காக, இம்மாதம் 16-ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்களுக்கு அவன் தடுத்து வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!