சிரம்பான், ஜன 3 – அதிக லாபம் என கிடைக்கும் என நம்பி 70 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் இல்லாத முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்து 178,000 ரிங்கிட்டை இழந்துள்ளார். முன்பின் அறிமுகம் இல்லாத நபரிடமிருந்து குறுஞ்செய்தியை பெற்ற அந்த பெண்மணி கடந்த நவம்பர் மாதம் 15ஆம் தேதி “Navicap” முதலீட்டுத் திட்டம் குறித்த தகவலையும் பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து வாட்ஸ்அப் மூலம் சந்தேகப் பேர்வழியிடம் இருந்து பெறப்பட்ட வங்கி எண்களுக்கு 178,000 ரிங்கிட்டை பட்டுவாடா செய்துள்ளார்.
அதன் பிறகு அந்த முதலீட்டு திட்டத்தில் தெரிவிக்கப்பட்ட லாபத்தை மீட்க முயன்றபோது அப்பணத்தை மீட்க முடியாமல் போனதால் தாம் ஏமந்ததை உணர்ந்து அவர் போலீசில் புகார் செய்ததாக நீலாய் போலீஸ் தலைவர் அப்துல் மாலிக் ஹாஷிம் தெரிவித்தார். குற்றவியல் சட்டத்தின் 420ஆது விதியின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதோடு மோசடி சந்தேகப் பேர்வழியை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.