
கோலாலம்பூர், ஜன 30- காப்புறுதி இழப்பீட்டை கோருவதற்காக, தனது கடை கொள்ளையிடப்பட்டதாக , உபரிப் பாகங்களை விற்கும் கடை உரிமையாளர் கூறிய பொய் அம்பலத்துக்கு வந்தது.
கடை கொள்ளையிடப்பட்டதில் 6 லட்சம் ரிங்கிட் வரை இழப்பை எதிர்நோக்கியிருப்பதாக , 39 வயதான அந்த ஆடவர் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.
அதையடுத்து , சம்பவ இடத்தில் இருந்த CCTV ரகசிய காமிரா பதிவை பரிசோதித்ததில், கொள்ளை சம்பவம் ஏதும் நிகழவில்லை என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
பின்னர் அந்த கடை உரிமையாளரை துருவி விசாரித்ததில், கொள்ளை சம்பவம் எதுவும் நிகழவில்லை என்பதை ஒப்புக் கொண்டதோடு, காப்புறுதி இழப்பீடு கோருவதற்காக அவ்வாறு பொய் புகார் கொடுத்ததாகவும் கூறியதாக, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Mohamad Fakhrudin Abdul Hamid தெரிவித்தார்.