கோலாலம்பூர் நவ 22 – கபிலன் ப்ளோன்றன் இயக்கத்தில், கர்ணன் ஜி கிராக், திவ்யா நாயுடு, MJ Nada மற்றும் குபேன் மஹாதேவன் நடிப்பில் ‘நினைவோ ஒரு பரவை’ திரைப்படம், ஜாங்கிரி புரோடொக்ஷன்ஸ் தயாரிப்பில் எதிர்வரும் 30ஆம் திகதி நாடு முழுவதும் 33 திரையரங்குளில் வெளியீடு காணவுள்ளது.
ஜாங்கிரி, அதிகாரி போன்ற திரைப்படங்களையும், ராமராஜன், கதாநாயகி போன்ற தொடர் நாடகங்களையும் இயக்கிய கபிலன் ப்ளோன்றனின் அடுத்த படைப்பில் தற்போழுது ‘நினைவோ ஒரு பரவை’ தயாராகி இருக்கின்றது.
கீதையின் ராதை படம் மூலம் பிரபலமான கர்ணன் ஜி கிராக், தனது நடிப்பை வேறுபட்ட கோணத்தில் இப்படத்தின் மூலம் மிளிரவிட்டிருக்கிறார்.
வடை புரோடொக்ஷன்ஸ் விநியோகத்தின் மூலம், மூன்று நாடுகளில் வெளியீடு காணும் முதல் மலேசிய தமிழ் திரைப்படமாக இது விளங்கும் என படத்தின் தயாரிப்பாளர் நந்தினி கணேசன் கூறியுள்ளார்.
இப்படத்தின் மூலம் #NOP2million எனும் ஹாஷ்டாக்-இனை உருவாக்கி முதல் நாளில் 2 மில்லியன் வசூலை பெரும் முதல் மலேசிய தமிழ் படமாக அமையும் என படத்தின் தயாரிப்பாளர் நந்தினி கணேசன் இப்படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சியின் தெரிவித்தார்.
தன்னிலையையும் நினைவையும் ஒரு பரந்த இடத்தில் இழந்த ஒர் இசை கலைஞனை தேடி வரும நினைவே இந்த ‘நினைவோ ஒரு பரவை’ படம் என இத்திரைப்படத்தின் இயக்குனர் கபிலனும், ஒளிப்பதிவாளர் செந்தில் குமரனும் தெரிவித்தனர். மேலும் இப்படத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாளுக்கு நாள் மண்ணின் மைந்தர்களின் பல தரமான படைப்புகளை தயாரித்து வெளியிட்டு வருகின்றனர். ஆகவே, இவர்களின் படைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் வகையில் ‘நினைவோ ஒரு பரவை’ திரப்படத்தை அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று கண்டு கலிக்கலாமே!