கோலாலம்பூர், ஜன 5 – இன்று முதல் ஞாற்றுக்கிழமை வரை ஜோகூர் , பஹாங்கில் பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என மலேசிய வானிலைத்துறை அறிவித்துள்ளது. நேற்று நள்ளிரவு முதல் தற்போதுவரை ஜோகூரில் சுமார் 1,000க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தினால் வெளியேற்றப்பட்டிருக்கும் இவ்வேளையில் வானிலைத் துறையின் மழை குறித்த எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
பகாங்கில் பெக்கான், ரோம்பின், ஜோகூரில் செகாமட், குளுவாங், மெர்சிங், குலாய், கோத்தா திங்கி ஜோகூர் பாரு ஆகிய இடங்களில் மழை பெய்யும். குவாந்தன், பத்து பஹாட் மற்றும் பொந்தியானில் தொடர்ந்து அடை மழை பெய்யும் என்றும் வானிலைத் துறை தெரிவித்துள்ளது.