கோலாலம்பூர், பிப் 5 – இ.பி.எப் சந்தாதாரர்கள் இனிமேல் தங்களது 2ஆவது கணக்கை பயன்படுத்தி தங்களுக்கும் அவர்களது உடனடி குடும்ப உறுப்பினர்களுக்கும் காப்புறுதி வாங்க முடியும். ஆயுள் காப்புறுதி, கடுமையான நோய்க்கான காப்புறுதி மற்றும் தக்காஃபுல் காப்புறுதியை இ.பி.எப் சந்தாதாரர்கள் வாங்க முடியும் என இன்று இ.பி.எப் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இ.பி.எப்-பினால் அங்கீகரிக்கப்பட்ட காப்புறுதி நிறுவனங்களின் காப்புறுதி திட்டங்களை உறுப்பினர்கள் வாங்க முடியும். 2022 ஆம் ஆண்டு ஜூலை முதல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை 102,301 க்கும் மேற்பட்ட இ.பி.எப் சந்தாதாரர்கள் காப்புறுதி மற்றும் தக்காஃபுல் திட்டங்களை வாங்கியிருப்பதாக இ.பி.எப் அறிவித்துள்ளது.
Related Articles
சபா, குவாலா பெஞ்யு கடற்கரையில் ஆயிரக்கணக்கான ஜெல்லிமீன்கள் கரை ஒதுங்கிய சம்பவம் ; அதீத வெப்பமான வானிலை தான் காரணமா?
4 hours ago
ஐந்து லட்சம் ரிங்கிட் இருந்த ‘சூட்கேஸ்’ ; ஒரு வாரம் ஆகியும், இன்னும் உரிமைக் கோர யாரும் முன் வரவில்லை
4 hours ago