புத்ரா ஜெயா, நவ 27 – மத்திய கிழக்கு, சீனா மற்றும் இந்தியாவிலிருந்து வரும் மக்கள் அல்லது சுற்றுப்பயணிகள் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் 30 நாட்கள் விசா இல்லாத பயண வாய்ப்பை பெறுவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கிறார். சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு சிற்றரசு, ஈரான் மற்றும் மேற்கு ஆசிய நாடுகள், துருக்கியே மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளும், 30 நாட்கள் விசா இலக்கு பெறும் இதர நாடுகளில் அடங்கும் . எனினும் இது பாதுகாப்பு அனுமதிக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார். அடுத்த ஆண்டு, சீனாவுடனான தூதரக உறவுகளின் 50 ஆண்டுகள் நிறைவு விழாவை மலேசியா கொண்டாடவிருக்கிறது என்றும் அன்வார் தெரிவித்தார். அதே வேளையில் சம்பந்தப்பட்ட நாடுகளில் குற்றப் பதிவுகள் மற்றும் வன்முறை ஆபத்தை ஏற்படுத்துவோருக்கு விசா வழங்கப்படாது என நேற்று P.K.R கட்சியின் தேசிய பேராளர் மாநாட்டின் முடிவில் அன்வார் கூறினார்.