
ஷா ஆலாம், மார்ச் 25 – கிள்ளான், Bukit Raja 2, Taman Mutiara பகுதியில் , உடைந்திருந்த நீர் குழாயை பழுது பார்க்கும் பணிகள் இன்று காலை மணி 6-உடன் பூர்த்தியடைந்தன .
அதையடுத்து, பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீண்டும் நீர் விநியோகிக்கப்-பட்டிருப்பதாகவும், நாளை காலை மணி 6-க்குள் விநியோகம் முழுமையாக திரும்பி விடுமெனவும் Air Selangor நிறுவனம் தெரிவித்தது.
நேற்றிரவு , Taman Mutiara பகுதியில் நீர் குழாய் உடைந்ததால், கிள்ளான் வட்டாரத்தில் 55 இடங்களில் நீர் விநியோகத் தடை ஏற்படுமென அந்நிறுவனம் அறிவித்திருந்தது.