Latestஉலகம்

இந்தியாவில், ஓட்டுனர் இன்றி 70 கிலோமீட்டர் தூரம் பயணித்த ‘மர்ம’ இரயில்

புது டெல்லி, பிப்ரவரி 26 – இந்தியா, ஜம்மு காஷ்மீரில் இருந்து, ஹோஷியார்பூருக்கு, ஓட்டுனர் யாரும் இல்லாமல் 70 கிலோமீட்டர் தூரத்திற்கு மர்மமான முறையில் சரக்கு இரயில் ஒன்று பயணித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கதுவா இரயில் நிலையத்திலிருந்து, மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த அந்த இரயில் முகேரியன் நகரிலுள்ள, உச்சி பாசி இரயில் நிலையத்தில் நின்றது.

ஓட்டுனரை மாற்ற ஏதுவாக அந்த இரயில் கதுவா இரயில் நிலையத்தில் நின்ற போது, அச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

53 பெட்டிகளுடன் முதலில் மலைச்சாரல் பகுதியில் மெதுவாக பயணித்த அந்த இரயில் பின்னர் வழியில் தனது வேகத்தை அதிகரித்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகள், தண்டவாளத்தில் மரக் கட்டைகளை வைத்து அந்த இரயிலை நிறுத்தினர்.

சம்பவத்தின் போது, அந்த இரயிலில் ஓட்டுனரும், உதவி ஓட்டுனரும் இல்லை.

எனினும், அச்சம்பவத்தில் உயிருடற் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்பதோடு, அச்சம்பவத்துக்கான உண்மைக் காரணத்தை கண்டறிய விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!