பாசிர் பூத்தே, நவம்பர் 16 – கிளந்தான், வாகாவ் ராஜாவில், கட்டுப்பாட்டை இழந்து காலி கடை ஒன்றை மோதித் தள்ளிய லோரியில் சிக்கிக் கொண்டதால், வலியால் துடித்த அதன் ஓட்டுனர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்டார்.
இன்று அதிகாலை மணி ஆறு வாக்கில் அவ்விபத்து நிகழ்ந்தது.
லோரி மோதித் தள்ளியதில், கடை அமைந்திருந்த கட்டடம் இடிந்து விழுந்தது.
பேரிரைச்சல் கேட்டு, சம்பவ இடத்திற்கு ஓடி வந்த பொதுமக்கள் சிலர் தீயணைப்பு மீட்புப் படை வீரர்களுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.
15 நிமிட போராட்டதிற்கு பின்னர், லோரியின் ஓட்டுனர் இருக்கையில் சிக்கி தலையில் பலத்த காயங்களுக்கு இலக்கான ஓட்டுனர் மீட்கப்பட்டு கருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.