Latestமலேசியா

மஇகா ஏற்பாட்டில் பொங்கல் விழா

கோலாலம்பூர், ஜன 15 –அறுவடைத் திருநாளான தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஇகா தலைமையகத்தில் இன்று பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன், தேசியத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன், மஇகா உயர்மட்டத் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள், இளைஞர், மகளிர், தொகுதி, கிளை, உறுப்பினர்கள் என திரளானோர் இந்த பொங்கல் விழாவில் கலந்துக் கொண்டனர்.

ம.இ.காவின் புதிய தலைமையக கட்டிட வேலைகள் பற்றிய விளக்கத்தையும் டான் ஶ்ரீ விக்கினேஸ்வரன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

உதவித் தலைவர் டத்தோ தி.முருகையாவின் செயற்குழுவின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த தேசிய பொங்கல் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலாச்சார அங்கங்களும் இடம்பெற்றிருந்தன. இதுபோன்ற நிகழ்ச்சிகள் அடுத்தடுத்த தலைமுறையினரிடம் நமது கலாச்சார பண்புகளையும் விவசாயத்தின் மேன்மையையும் கடத்துவதில் பெரும் பங்காற்றுகின்றன என்பதை மறுக்க முடியாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!