Latestமலேசியா

திரங்கானுவில், பள்ளி கதவு பிடியில் சிக்கிக் கொண்ட மாணவரின் விரல்; பாதுகாப்பாக விடுவிக்கப்பட்டது

செத்தியூ, ஜனவரி 5 – திரங்கானு, செத்தியூவில், கைவிரல் பள்ளி கதவு பிடியில் சிக்கிக் கொண்டதால், மாணவர் ஒருவர், 45 நிமிடங்களுக்கு மேல் வலியை தாங்கிக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

அதனால், கதவு பிடி அகற்றப்படாத நிலையில், அந்த மூன்றாம் ஆண்டு மாணவரை, பள்ளியின் ஆசிரியர்களும், பராமரிப்பாளரும் உடனடியாக ஸ்ரீ லங்காப் சுகாதார மையத்திற்கு கொண்டு சென்றனர்.

எனினும், அந்த கதவு பிடியிலிருந்து மாணவரின் விரலை விடுவிக்க முடியாமல் போனதால், சம்பந்தப்பட்ட சிகிச்சை மையத்தின் பணியாளர்கள், தீயணைப்பு மீட்புப் படை வீரர்களுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது.

நேற்று நண்பகல் மணி 12.05 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்ததை, செத்தியூ தீயணைப்பு மீட்பு நிலையத்தின் தலைவர் முஹமட் ரசாலி ரபியி உறுதிப்படுத்தினார்.

ஒன்பது தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியோடு, சுமார் 45 நிமிட போராட்டத்திற்கு பின்னர், கதவு பிடியை வெட்டி அம்மாணவரின் விரல் விடுவிக்கப்பட்டது.

அதன் பின்னர், சிகிச்சை மையத்தில், அம்மாணவருக்கு மேல் சிகிச்சை வழங்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!