பெய்ரூட், நவம்பர் 27 – சிரியாவின் தலைநகர் டாமஸ்கஸ் அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலால் அந்த விமான நிலையம் சேதத்திற்கு உள்ளானதோடு செயல் இழந்ததாக போர் கண்காணிப்பாளர் ஒருவர் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இஸ்ரேலிய போர் விமானங்கள் டமாஸ்கஸ் அனைத்துலக விமான நிலையத்தை குறிவைத்து ஒரு புதிய தாக்குதலை நடத்தின. கடந்த வாரம் இதே போன்ற தாக்குதல் நடத்தப்பட்டபோதும் அந்த விமான நிலையம் செயல் இழந்த பின்னர் மீண்டும் திறக்கப்பட்ட சில மணி நேரத்திற்கு பின்னர் புதிய தாக்குதல் நடத்தப்பட்டது.
விமான நிலையத்தின் ஓடுபாதைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் புதிய தாக்துதலை நடத்தியதாகவும் டமாஸ்கஸின் மறுபுறத்தில் உள்ள மஸ்ஸே (Mazzeh) பகுதியில் உள்ள ராணுவ விமான நிலையத்தின் திசையில் இருந்து பயங்கர வெடிச்சத்தம் கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. மஸ்ஸே பகுதியில் உள்ள விமான பாதுகாப்பு படை தளத்தை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு அதிகாரியும் மேலும் இரண்டு அதிகாரிகளும் காயம் அடைந்தனர் .