Latestமலேசியா

குழந்தை பராமரிப்பு மையத்தில் 3 மாத கைகுழந்தை இறந்தது

கோலாலம்பூர், ஜன 28 – கோலாலம்பூர், Bandar Baru Bangi- யில் , taska- குழந்தை பராமரிப்பு மையத்தின் கண்காணிப்பில் இருந்தபோது , 3 மாத ஆண் குழந்தை இறந்தது.

அந்த மையத்தின் பணியாளரால் சுயநினைவற்ற நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட அந்த கைகுழந்தை , சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக, Kajang மாவட்ட போலீஸ் தலைவர் Mohd Zaid Hassan தெரிவித்தார்.

தொடக்க விசாரணையில், அச்சம்பவத்தில் வன்செயலுக்கான எந்த அம்சமும் இல்லையென தெரிய வந்திருக்கிறது. ஆனால் குழந்தையின் மரணத்திற்கு கவனக்குறைவு காரணமாக இருந்திருக்கலாமென Mohd Zaid குறிப்பிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!