கோலாலம்பூர், ஜன 22 – சிலாங்கூர், புச்சோங்கில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக கிடந்த தனது நண்பரின் வீட்டை வெளிநாட்டினர் சட்டவிரோத ஆக்கிரமித்திருப்பதைக் கண்டு ஒருவர் ஆச்சரியமடைந்தார். இந்த விவகாரத்தை தனது முகநூல் கணக்கின் மூலம் பதிவேற்றிய ஸ்ரீலபு கெடா, கிழக்கு கடற்கரையில் வசிக்கும் தனது நண்பர் அடுக்குமாடி குடியிருப்பை விற்குமாறு கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். அடுக்கு மாடி வீட்டின் விற்பனையை நிர்வகிக்க விரும்பிய அவர், வீட்டை ஆய்வு செய்ய வந்தபோது வெளிநாட்டினர் அந்த வீட்டில் இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்ததாக அவர் கூறினார்.
அந்த வீட்டின் சாவியைப் பெற்ற பிறகு, சிரம்பான் 2 இல் வசிக்கும் நான், புச்சோங்கில் உள்ள வீட்டை விற்பனை செய்வதற்கு முன்பு அதன் நிலையைக் கண்டறிய ஆய்வு செய்ய வந்தேன். அந்த வீட்டில் வெளிநாட்டினர் வசிப்பதைக் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன், பின்னர் அந்த வீட்டின் உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது . அந்த தகவலால் அவர் அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த வெளிநாட்டவர்களுக்கு மலாய் அல்லது ஆங்கிலம் பேசத் தெரியாது, அதனால் அவர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அந்த நபர் கூறினார். வெளிநாட்டினர் அத்துமீறி நுழைந்து தனது நண்பரின் வீட்டில் தங்கியிருப்பது சட்டத்திற்கு முரணான செயல்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் துணிந்து செயல்படுவதையே காட்டுகிறது என்றார்.
வீட்டுக்கு தண்ணீர் விநியோகம் அண்டை வீட்டில் இருந்து எடுக்கப்படுகிறது, ஆனால் எப்படி மின்சார விநியோகத்தை பெற்றனர் என்று தெரியவில்லை என்று அவர் கூறினார். யாருடைய குறுக்கீடும் இல்லாமல் நீண்ட காலமாக அந்த வீட்டில் இலவசமாக வசித்து வருவதாக வங்காளதேச ஆடவர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த வீடு உண்மையிலேயே என் நண்பருடையது என்பதற்கு ஆதாரம் கேட்கிறார்கள், “நான் வீட்டின் உரிமையாளரிடம் போலீஸ் புகாரைக் கேட்டுள்ளேன். மேலும் இந்த வழக்கை குடிநுழைவு அதிகாரிகளிடம் புகார் செய்வேன் என்று கூறியுள்ளேன். காலி வீடுகள் உள்ளவர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.