Latestமலேசியா

கூட்டரசு பிரதேச அறக்கட்டளையின் பயிற்சித் திட்டம் ; 2,000 இளைஞர்கள் பயனடைவர்

கோலாலம்பூர், பிப் 2 – உபசரிப்பு துறையிலும், விமான போக்குவரத்து துறையின் தரை சார்ந்த சேவையிலும் பயிற்சியளிக்கும் திட்டத்தினை கூட்டரசு பிரதேச அறக்கட்டளை மேற்கொள்ளவிருக்கிறது.

அந்த பயிற்சி திட்டத்தினை DHS Hospitality Academy கல்வி நிலையத்துடனும், UPM பல்கலைகழகத்தின் கல்வி – பயிற்சி நிலையத்துடனும் இணைந்து மேற்கொள்ளவிருக்கிறது. அத்தரப்புகளுடன் கூட்டரசு பிரதேச அறக்கட்டளை கருத்திணக்க உடன்பாடு செய்துக் கொண்டது.

அந்த கருத்திணக்க உடன்பாட்டில், கூட்டரசு பிரதேச அறக்கட்டளையின் சார்பில் தலைமை நிர்வாக அதிகாரி Datuk Zaizalnizam Zainun -னும் , DHS Hospitality Academy – யின் தலைமை செயல்முறை அதிகாரி Dr. S. Sri Kumar-ரும் கையெழுத்திட்டனர்.
அந்த உடன்பாடு கையெழுத்திடும் நிகழ்வினை UPM பல்கலைகழகத்தின் கல்வி – பயிற்சி நிலையத்தின் நிர்வாகி Dr Kamil Yusoff பார்வையிட்டார்.

இந்த பயிற்சி திட்டத்தின் வாயிலாக 2,000 இளைஞர்கள் நன்மையடைவர். குறிப்பாக, வீடற்றவர்கள் , தனித்து வாழும் தாய்மார்கள், மாற்றுத் திறனாளிகள், மூத்த குடிமக்கள் , சிறிய குற்றங்களைப் புரிந்து தண்டிக்கப்பட்டவர்களும் இந்த பயிற்சி திட்டத்தில் இணைய முடியும்.

இத்திட்டத்தில் இணைய ஒருவர் கோலாலம்பூர் கூட்டரசு பிரதேசத்தின் குடிமக்களாக இருக்க வேண்டும். அவர்களது பெற்றோர் கூட்டர பிரதேசத்தின் வாக்காளர்களாக இருக்க வேண்டும். குடும்ப வருமானம் 1,500-க்குள் உட்பட்டதாக இருக்க வேண்டும்.

இந்த ஓராண்டு பயிற்சித் திட்டத்தில் பங்குபெறுவர்களுக்கு 600 ரிங்கிட்டிலிருந்து 750 ரிங்கிட் வரையில் மாதாந்திர ஊக்குவிப்புத் தொகையுடன், 250 ரிங்கிட் உற்பத்தி திறனுக்கான அலவன்சும் வழங்கப்படும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!