Latestமலேசியா

வேப் சிகரெட்டை புகைத்த சிலாங்கூரைச் சேர்ந்த 6 மாணவர்கள் வாந்தியினால் பாதிப்பு

கோலாலம்பூர், நவ 20 – சிலாங்கூரில் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்கள், வேப் மின்னியல் சிகரெட்டை புகைத்ததால் வாந்தி உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்தை சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர் கன்டறிந்துள்ளார். அவரது விசாரணையில், 5ஆம் மற்றும் 2ஆம் படிவத்தைச் சேர்ந்த அந்த 6 மாணவர்களும் ஒரே வேப் மின்னியல் சிகிரெட்டை புகைத்தது தெரியவந்தது.

பள்ளியின் ஓய்வு நேரத்தில் அவர்கள் இச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். அந்த 6 மாணவர்களில் ஒரு சிலர் மிரட்டப்பட்டு வேப் மின்னியல் சிகிரெட்டை புகைக்க வற்புறுத்தப்பட்டதாகவும் அந்த ஆசிரியரிடம் கூறியுள்ளனர்.

அந்த சிகிரெட் வகுப்பின் அலமாரியில் ஒளிவைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. அந்த மாணவர்களில் ஒருவர் மயக்கத்தில் இருந்ததாகவும், அவசர சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேல் விசாரணைக்காக அந்த மாணவர்கள் போலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, பள்ளி மாணவர்கள் மத்தியில் சுலபமாக இதுபோன்ற மின்னியல் சிகரெட் கிடைப்பது மிகவும் கவலையளிப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்த ஆசிரியர் கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!