குஜராத், நவ 4 – இந்தியா குஜராத்தில் 9ஆம் வகுப்பில் படிக்கும் 15 வயது மாணவி தேர்வு மண்டபத்திற்குள் நுழையும்போது மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக மாண்டுள்ளார்.
சாக்ஷி ரஜோசரா என அடையாளம் காணப்பட்ட அம்மாணவி நேற்று வெள்ளிக்கிழமை காலை தேர்வு மண்டபத்திற்குள் செல்லும்போது திடிரென மயங்கி விழுந்திருக்கின்றார்.
பதறிப்போன பள்ளி நிர்வாகம் அவரை மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற வேளையில் அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக் தெரிவித்துள்ளனர்.
சவப்பரிசோதனைக்குப் பின்னர்தான் அவர் இறந்ததற்கான மேல் காரணம் என்ன என்பது தெரிய வரும் என அறியப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக குஜராத்தில் இளையோர் மத்தியில் இதுபோன்ற திடீர் மரணங்கள் அதிகரித்து வருவது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதோடு அதற்கான காரணத்தை கண்டறிய சமூக ஆர்வலர்கள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.