Latestமலேசியா

காரில் 8 மணி நேரம் விட்டுச் செல்லப்பட்ட சிறுமி மரணம் ; குற்றச்சாட்டை மறுத்தார் தாய்

பெட்டாலிங் ஜெயா, டிசம்பர் 22 – காரில் எட்டு மணி நேரத்திற்கு விட்டு செல்லபட்டதில் பரிதாபமாக உயிரிழந்த இரண்டு வயது சிறுமியின் தாய்க்கு எதிராக இன்று கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

எனினும், 38 வயது நூர் சாரி பர்தியானா முகமது அம்ரான் எனும் அப்பெண், தமக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார்.

நவம்பர் எட்டாம் தேதி, காலை எட்டு மணி முதல் மாலை மணி 3.15 வரையில், அரா டாமான்சாராவிலுள்ள, வீடொன்றின் முன்புறம், இரண்டு வயது மூன்று மாதம் நிரம்பிய ஐரிஸ் ஹெய்டி முகமது ஹபீஸ் எனும் தனது மகளை, அலட்சியமாக காரில் விட்டுச் சென்று, அவருக்கு மரணம் விளைவித்தாக அப்பெண் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், 50 ஆயிரம் ரிங்கிட்டிற்கு மேற்போகாத அபராதம் அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

ஏழாயிரம் ரிங்கிட் உத்தரவாத தொகையிலும், தனிநபர் உத்தரவாததின் பேரிலும், அப்பெண்னை இன்று விடுவிக்க நீதிபதி அனுமதி வழங்கிய வேளை ; ஜனவரி 30-ஆம் தேதி இவ்வழக்கு விசாரணை செவிமடுக்கப்படும்.

முன்னதாக, சம்பவ நாளன்று, தனது இதர இரு பிள்ளைகளை பள்ளியில் விட்ட பின்னர், மூன்றாவது மகளை மழலையர் பராமரிப்பு மையத்தில் விடச் சென்ற அப்பெண், காரை நிறுத்தி, இணைய வியாபார நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அதனால், மகளை பராமரிப்பு மையத்தில் விட மறந்து வீடு திரும்பிய அவர், மாலையில் தான் மகள் சுயநினைவின்றி காரில் கிடப்பதை கண்டதாக, ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!