சென்னை, மார்ச் 8 – பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் நடிகர் அஜித், சென்னையில் அமைந்துள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
இதனை தொடந்து, பரிசோதனையின் இறுதியில், அஜித்தின் மூளையில் ஒரு சிறிய கட்டி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து மதுரை மற்றும் கேரளாவில் இருந்து 2 மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு நடிகர் அஜித் குமாருக்கு மூளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அறுவை சிகிச்சை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றதாகவும், தற்போது அஜித் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் “விடா முயற்சி” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.