Latestமலேசியா

கோத்தா கமுனிங்கில் வர்த்தகர் ஒருவர் நால்வரால் தாக்கப்பட்டது தொடர்பில் போலீஸ் விசாரணை -ஒருவர் கைது

ஷா அலாம், ஆக 30 – விடியற்காலையில் வர்த்தகர் ஒருவரை தாக்கி அவரது காரை மோதியபின் தங்களது காரினால் தப்பியோடிய நால்வர் குறித்து போலீசார் தற்போது தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். நேற்று முன் தினம் காலை மணி 6.15 அளவிவில் அந்த வர்த்தகரை தாக்கும் நோக்கத்தில் நடந்த அந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதை ஷா அலாம் போலீஸ் தலைவர் Iqbal Ibrahim உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இதர நபர்களை நாங்கள் தேடிவருகிறோம் என அவர் கூறினார். கோத்தா கமுனிங்கில் தனது தொழிலாளர்களை வேலைக்கு விடச் சென்றபோது இந்த சம்பவம் நடந்ததை அந்த வர்த்தகரின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!