Latestஇந்தியா

விமான ஓடுபாதையில் ‘பிக்னிக்கா’ ?; மன்னிப்புக் கோரியது இண்டிகோ விமான நிறுவனம்

புதுடெல்லி, ஜனவரி 18 – விமான ஓடுபாதையில், பயணிகள் குழு ஒன்று அமர்ந்து உணவு உண்ணும் காணொளி ஒன்று வைரலாகியுள்ளதை அடுத்து, இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இண்டிகோ மன்னிப்புக் கோரியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை, கோவாவிலிருந்து புதுடெல்லிக்கு பயணமான இண்டிகோ விமானம் ஒன்றும், மோசமான வானிலை காரணமாக மும்பை விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

அதனால், வேறு வழியின்றி, அவ்விமான பயணிகள், விமான ஓடு பாதையில் அமர்ந்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்களில் சிலர் உணவு உட்கொள்ளும் வேளை ; மேலும் சிலர் விமான பயண விவரங்களை அறிய, கைப்பேசியை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகள் வைரலாகி இருக்கும் காணொளியில் இடம் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!