Latestமலேசியா

2017 முதல் 2023 வரை, பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு சரிவு கண்டுள்ளது ; கல்வி அமைச்சு தகவல்

கோலாலம்பூர், மார்ச் 27 – நாட்டில், பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

குறிப்பாக, 2017-ஆம் ஆண்டிலிருந்து கடந்தாண்டு வரையில், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாக, கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ மக்களவையில் இன்று தெரிவித்தார்.

2017-ஆம் ஆண்டு, பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட ஆரம்ப பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 0.29 விழுக்காடாக பதிவான வேளை ; கடந்தாண்டு அது 0.06 விழுக்காட்டிற்கு சரிவு கண்டதையும் வோ சுட்டிக்காட்டினார்.

அதே காலகட்டத்தில், பாதியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துக் கொள்ளும் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1.36 விழுக்காட்டிலிருந்து 0.83 விழுக்காடாக குறைந்துள்ளது.

நகர் – புறநகர் பள்ளிகளிலும் குறைவான மாணவர்களே, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.

பள்ளி படிப்பை பாதிலேயே கைவிடும் மாணவர்களின் விகிதம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வோ இவ்வாறு பதிலளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!