கோலாலம்பூர், மார்ச் 27 – நாட்டில், பாதியிலேயே பள்ளி படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
குறிப்பாக, 2017-ஆம் ஆண்டிலிருந்து கடந்தாண்டு வரையில், பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிடும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்துள்ளதாக, கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ மக்களவையில் இன்று தெரிவித்தார்.
2017-ஆம் ஆண்டு, பள்ளி படிப்பை பாதியிலேயே கைவிட்ட ஆரம்ப பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 0.29 விழுக்காடாக பதிவான வேளை ; கடந்தாண்டு அது 0.06 விழுக்காட்டிற்கு சரிவு கண்டதையும் வோ சுட்டிக்காட்டினார்.
அதே காலகட்டத்தில், பாதியிலேயே பள்ளிப் படிப்பை முடித்துக் கொள்ளும் இடைநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 1.36 விழுக்காட்டிலிருந்து 0.83 விழுக்காடாக குறைந்துள்ளது.
நகர் – புறநகர் பள்ளிகளிலும் குறைவான மாணவர்களே, பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
பள்ளி படிப்பை பாதிலேயே கைவிடும் மாணவர்களின் விகிதம் குறித்து மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வோ இவ்வாறு பதிலளித்தார்.