Latestஉலகம்

ஸ்பெயினில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயில் 10 பேர் பலி

வெலன்சியா, பிப்ரவரி 24 – ஸ்பெய்ன் நாட்டின் மூன்றாவது மிகப் பெரிய நகரான வெலன்சியாவில் அடுக்குமாடி குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது பத்து பேர் உயிழரிந்தனர்.

நேற்று மாலை, அக்குடியிருப்பின் நான்காவது மாடியில் ஏற்பட்ட தீ, பலத்த காற்று வீசியதில், அரை மணி நேரத்திலேயே வேகமாக பரவி விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

தற்போதைய நிலவரப்படி, கூடுதலாக யாராவது காணாமல் போயிருப்பதாக தகவல் இல்லை; என்றாலும் சிலர் தீயில் கருகி மாண்டிருக்கும் சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என மாநகர மேயர் சொன்னார்.

பலியானவ 10 பேரில் 9 பேரது சடலங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.

தீயை அணைக்கும் போது படுகாயமடைந்து இரு தீயணைப்பு வீரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அடுக்குமாடி தீயில் எரிந்ததால், நூற்றுக்கணக்கானோர் தற்காலிகமாக தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலர் தங்களின் உறவினர்கள் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!