கோலாலம்பூர், பிப் 7 – நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 11,034 பேர் கோவிட் தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகினர். சனிக்கிழமையன்று 9,117 ஆகவும் நேற்று 10,089 ஆகவும் இருந்த கோவிட் தொற்றின் எண்ளிக்கை இன்று 11,000 த்திற்கும் மேல் அதிகரித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்வழி நாட்டில் கோவிட் தொற்று பரவியது முதல் அத்தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை தற்போது 29 லட்சத்து 25,254 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குனர் டாக்டர் Noor Hisham Abdullah டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Related Articles
Check Also
Close
-
சுங்கை பூலோ சிறையில் கைதிகள் நெரிசல்6 hours ago