மியாமி, நவம்பர் 7 – முதலைகள் நிறைந்த நீரிணைப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான விமானத்தின் உடைந்த இறக்கையை பிடித்துக் கொண்டு ஒன்பது மணி நேரத்திற்கும் மேலாக தொங்கிய விமானி பதற்றம் அடைந்தார்.
உள்நாட்டு நேரப்படி கடந்த செவ்வாய்கிழமை, அதிகாலை மணி நான்கு வாக்கில், அமெரிக்கா, எவர்கிலேட்ஸ் (Everglades) பகுதியில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்தின் போது, அவ்விமானத்தில், விமானி மட்டுமே கூறப்படுகிறது.
எனினும், பின்னர் வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்த ஹெலிகப்டர் ஒன்றின் உதவியோடு அந்த விமானி மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஹெலிகப்டரில் இருந்து வந்த கயிற்றை பற்றிக் கொண்ட விமானி, மேல் நோக்கி இழுக்கப்படும் காணொளி வைரலாகியுள்ளது.