கோலாலம்பூர் ஜன 14- தைப் பிறந்தால் வழி பிறக்கும் என்பதற்கேற்ப நம்பிக்கையோடும் ஒற்றுமையோடும் நம் இந்திய சமூகத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான புதிய தொடக்கமாக தைப்புத்தாண்டை கொண்டாடுவோம் என தொழில்முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சர் டத்தோ ரமணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பல்வேறு சவால்களைக் கடந்துஇந்நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்துக்கும் இந்திய சமூகம் பெரும் பங்காற்றியுள்ளது. அந்த அடிப்படையில் மலேசியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமைத்துவத்தில் இந்த புத்தாண்டை குதூகலத்தோடுகொண்டாடுவோம் என அவர் கேட்டுக்கொண்டார்.
சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் தமது தொகுதியில் வாழும் பி40 பிரிவைச் சேர்ந்த 3000 பேருக்கு கரும்புகளையும் பொங்கல் அன்பளிப்புகளையும் நேற்று வழங்கினார். தமது தொகுதியில் உள்ள 15 பகுதிகளில் உள்ள இந்திய குடியிருப்பாளர்களிடம் ரமணன் அந்த பொங்கல் அன்பளிப்புகளை வழங்கி அவர்களோடு அளவிளவினார்
தைப்புத்தாண்டு கொண்டாட்ட உணர்வை அவ்வட்டார மகளிடையே மேலோங்கச் செய்யும் வகையில் கடந்தாண்டு முதல் அவர் பொங்கல் அன்பளிப்புகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.