Latestமலேசியா

பேராக்கில், காரில் கருகிய நிலையில் இறந்து கிடந்த பூர்வக்குடி ஆடவரின் சடலம் மீட்பு

பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 2 – பேராக், தாப்பா , ஜாலான் பஹாங்கில், நேற்றிரவு ஆடவர் ஒருவர் காரில் கருகிய நிலையில் இறந்து கிடக்க காணப்பட்டார்.

அச்சம்பவம் தொடர்பில், இரவு மணி 10.04 வாக்கில் அவசர அழைப்பு கிடைத்ததாக, பேராக் மாநில தீயணைப்பு மீட்புப் படையின் நடவடிக்கை பிரிவு துணை இயக்குனர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தாப்பா தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள், 50 விழுக்காடு தீக்கிரையான காரின் பின் இருக்கையில், கருகிய நிலையில் காணப்பட்ட ஆடவரின் சடலத்தை பொதுமக்கள் உதவியுடன் மீட்டனர்.

உயிரிழந்தவர் 50 வயது மதிக்கத்தக்க பூர்வக்குடி ஆடவர் என நம்பப்படுகிறது.

சடலம் மேல் நடவடிக்கைகாக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!