Latestமலேசியா

துணையமைச்சராக நியமிக்கப்பட்ட போதிலும் மித்ராவின் தலைவராக ரமணன் தொடர்ந்து இருந்து வருகிறார்

கோலாலம்பூர், டிச 13 –  பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தம்மை தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சராக நியமித்திருந்தாலும் மித்ரா சிறப்புக் குழுவின் தலைவராக தாம் தொடர்ந்து இருந்து வருவதாகவும் இப்போதைக்கு இந்த நிலையில் எந்தவொரு மாற்றமும் இல்லையென டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான ரமணன் கடந்த ஏப்ரல் மாதம் மித்ரா சிறப்புக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார்.

இதனிடையே தொழில் முனைவர், மேம்பாடு மற்றும் கூட்டுறவுத்துறை துணையமைச்சராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று முதல் நாளாக தமது பணியை ரமணன் தொடங்கினார்.

இன்று காலை 11 மணியளவில் தொழில் முனைவர்,மேம்பாடு மற்றும் கூட்டுறவு அமைச்சின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்த ரமணனை அந்த அமைச்சின் தலைமை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்று அமைச்சு தொடர்பான விளக்கங்களை அவருக்கு வழங்கினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!