குவந்தான், பிப்ரவரி 14 – பஹாங், குவந்தானிலுள்ள, செபாட் கடற்கரையில், கரை ஒதுங்கி இருந்த ஆடவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
தெலுக் செம்பெடாக் கடற்கரைப் பகுதியில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, தனது தமக்கையுடன் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த போது, கடலில் தவறி விழுந்து அடித்துச் செல்லப்பட்ட நேப்பாள ஆடவரின் சடலம் அதுவென நம்பப்படுகிறது.
இன்று காலை மணி 7.30 வாக்கில், அவர் கடலில் தவறி விழுந்த இடத்திலிருந்து சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ள, செபாட் கடற்கரையில் உடல் கரை ஒதுங்கி இருந்ததை பொதுமக்கள் பார்த்து தகவல் வழங்கியதாக, பஹாங் தீயணைப்பு மீட்புத் துறையின் பொது தொடர்பு அதிகாரி ஜுல்பட்லி ஜகாரியா தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை, தெலுக் செம்பெடாக் கடற்கரையில், வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்த நேப்பாள ஆடவர் ஒருவர் தவறி கடலில் விழுந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.