Latestமலேசியா

ஆற்றில் மூழ்கி மாண்ட 3 மாணவர்களின் குடும்பத்திற்கு பெருவாஸ் எம்.பி நிதியுதவி

பெருவாஸ் , பிப் 15 – அண்மையில் மஞ்சோங் செகாரிக்கு அருகே கம்போங் தஞ்சோங் பத்து, சுங்கை செம்பிட் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த மூன்று மாணவர்களின் குடும்பத்திற்கு பெருவாஸ் நாடாளுமன்ற உருப்பினர் மாண்புமிகு டத்தோ ங்கே கூ ஹாம் தலா ஆயிரம் 1,000 ரிங்கிட் நிதியுதவி வழங்கினார். லுமுட் சிகாரி ஆற்றில் குளிக்க சென்ற தர்மராஜ், சரத் மற்றும் ஈஸ்வரப் பிள்ளை ஆகிய மூவரும் ஆற்றில் மூழ்கி மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தீயணைப்பு உறுப்பினர்களின் உதவியோடு அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. அம்முவரின் குடும்பத்தினரை நேரில் சென்று தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்ட ங்கே கூ ஹாம் தம்மால் இயன்ற உதவிகளையும் செய்தார்.

நகராண்மை கழக உறுப்பினர் முருகன், முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம், நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவுக்கான சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி ஆகியோரும் அந்த மாணவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!