Latestஇந்தியா

இந்தியாவில், மாமனாருடன் கம்பி நீட்டிய மனைவி; மகன் வழக்குப் பதிவு

புதுடெல்லி, நவம்பர் 16 – இந்தியா, ராஜஸ்தான் மாநிலத்தில், தனது மனைவியுடன் கம்பி நீட்டிய சொந்த தந்தைக்கு எதிராக, மகன் ஒருவர் வழக்கு தொடுத்துள்ளார்.

ரமேஷ் வைரகி எனும் தனது தந்தை, வேண்டுமென்றே தனது மனைவியை மயக்கி இழுத்து கொண்டு ஓடி விட்டதாக, பவன் வைரகி எனும் அந்நபர் தனது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.

அதனால், அப்பெண் தனது ஆறு மாதக் குழந்தையை கைவிட்டுச் சென்றதாகவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே சமயம், தனது மோட்டார் சைக்கிளையும் தந்தை திருடிக் கொண்டு சென்று விட்டதாகவும் பவன் போலீஸ் புகார் செய்துள்ளார்.

எனினும், தனது மனைவி மேல் குற்றம் இல்லை. நடந்தது அனைத்துக்கும் தந்தை தான் காரணம் எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

அச்சம்பவம் தொடர்பில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ள வேளை, பவனின் மனைவியையும், மோட்டார் சைக்கிளையும் தேடி வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!