
கோலாலம்பூர், ஏப்ரல்-19- சைவத் திருக்கோயில் கலை கல்வி அறவாரியம் தனது திருக்கோயில், சமயக் கல்லூரித் திட்டத்திற்காக 1,000 பேர் கலந்து கொள்ளும் மாபெரும் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்துகின்றது.
எதிர்வரும் மே 10-ஆம் தேதி சனிக்கிழமை, இரவு மணி 7.00 முதல் சிலாங்கூர் ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் இவ்விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.
தலைநகரின் மிகச்சிறந்த உணவு நிறுவனங்களின் விருந்துடன் திருமுறையில் பரதநாட்டியம், திருமுறைப் பண்ணிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சியுடன் அறவாரியத் திட்டத்தைப் பற்றிய முழு விளக்கக் காணொலிக் காட்சிகள் அதில் ஒளிபரப்பப்படும்.
சிலாங்கூர், கெர்லிங் பட்டணத்திற்கு அருகில் 7.49 ஏக்கர் நிலத்தில் 50 மில்லியன் ரிங்கிட் மதிப்பில் அமையும் இப்பெருந்திட்டத்தில் ஆகமநெறி வழுவாமல் ஒரு சைவத் திருக்கோயில் அமைகிறது.
இந்துக்களின் திருமணம், சமயக் கருத்தரங்குகள் ஆகியவற்றை நடத்த ஏதுவாக 2 மாடிகளில் பலநோக்கு மண்டபம் ஒன்றும் அமைக்கப்படுகிறது.
இரண்டாம் பகுதியில் மாணவர் விடுதியுடன் கூடிய அனைத்து வசதிகளுடன் சமயக் கல்லூரி அமைக்கப்படுகிறது.
இதில் திருக்கோயிலுக்கான பூசகர், ஓதுவார் ஆகியோருக்கான பயிற்சியுடன் சமய ஆசிரியர்களும் உருவாக்கப்படுவர்.
மூன்றாம் பகுதியாக 1,200 பேர் அமரும் மாநாட்டு மண்டபம் ஒன்று அமைக்கப்படும்.
முழுநேரப் பயிற்சி பெற்ற சமய ஆசிரியர்களும் சமயப் பணியாளர்களும் நமக்கு இல்லை என்ற குறையைப் போக்கும் பொருட்டே இப்பெருந்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநில அரசின் அனுமதியுடனும் மலேசிய இந்து சங்கத்தின் ஆதரவுடனும் இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
எனவே மலேசிய இந்துக்கள் விருந்தில் கலந்து கொண்டு திருப்பணி நிறைவேற ஆதரவளிக்குமாறு அறவாரியத்தின் தலைவர் முனைவர் நாகப்பன் ஆறுமுகம் கேட்டுக்கொண்டார்.
தலைநகருக்கு வெளியே இருப்பவர்கள் தொலைபேசி வழியாகப் பதிவுச் செய்து கட்டணத்தைச் செலுத்தலாம்; விருந்தன்று மண்டப முகப்பில் அவர்கள் அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: சரவணா நடராசன் 012 – 539 3915
வங்கி விவரம்:
Public Bank
Yayasan Falsafah dan Institusi Saiva
A/C 3208616019
காணிக்கையைச் செலுத்தியவுடன் வங்கிச் சீட்டை 012-5393915 எனும் எண்ணுக்கு வாட்ஸப் செய்துவிடவும்.
வங்கிச் சீட்டில் முழுப்பெயர், அடையாள அட்டை எண், தொலைபேசி எண் ஆகியவற்றுடன் விருந்து நிகழ்ச்சி என்றும் குறிப்பிட வேண்டும்.