Latestஉலகம்

சமையல் எரிவாயுவை பிளாஸ்டிக் பைகளில் நிரப்பும் பாகிஸ்தான் மக்கள்

இஸ்லாமாபாத், ஜன 4 – பொருளாதார நெருக்கடியால், பாகிஸ்தானில் மக்கள் சமையல் எரிவாயுவை , பெரிய பிளாஸ்டிக் பலூன்களிலும் பிளாஸ்டிக் பைகளிலும் நிரப்பிச் செல்லும் அளவிற்கு மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கின்றனர்.

சமையல் எரிவாயுக்கான சிலிண்டர் கலன்கள் இல்லாதததால் , பைகளில் எரிவாயுவினை நிரப்பிச் செல்லும் காணொளி சமூக வலைத்தளங்களில் வலம் வரத் தொடங்கி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்நாட்டில் சில இடங்களில் மக்கள், கடந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக , சமையல் எரிவாயு இன்றி உள்ள நிலையில், அண்மையில் அந்நாட்டு அரசாங்கம் கோதுமை, சீனி, நெய் போன்ற உணவுப் பொருட்களின் விலையையும் அதிகரித்துள்ளது. இது கீழ் நிலை மக்களை அன்றாட சாப்பாட்டுக்கே அல்லல்படும் நிலைக்குத் தள்ளியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!