Latestமலேசியா

கணவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு குத்தகை முன்னாள் ஜி.எல்.சி அதிகாரி கைது

கோலாலம்பூர், ஜன 10 – தனது கணவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு திட்டங்களை வழங்கியதன் தொடர்பில் ஜி.எல்.சி (GLC) எனப்படும் அரசு சார்பற்ற நிறுவனங்களின் நடவடிக்கை பிரிவுக்கான முன்னாள் அதிகாரியை எம்.ஏ.சி.சி கைது செய்தது. 300,000 மதிப்புடைய குத்தகைக்கான போக்குவரத்து வேலைகளை தமது கணவருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்குவதற்கு தமது பதவியை பயன்படுத்தியது தொடர்பில் அந்த முன்னாள் பெண் அதிகாரி கைது செய்யப்பட்டார். 2022 ஆம் ஆண்டு அவர் இந்த குற்றத்தை புரிந்துள்ளார்.

போக்குவரத்து குத்தகைக்கான 280,000 ரிங்கிட் திட்டங்களுக்கான துணை குத்தகைக்கான கட்டணத்தை அந்த பெண் தமது சொந்த கணக்கில் சேர்த்துள்ளார் என எம்.ஏ.சி.சிக்கு நெருக்கமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 40 வயதுடைய அந்த பெண் நேற்று காலையில் சிலாங்கூர் எம்.ஏ.சி.சிக்கு வாக்குமூலம் வழங்க வந்தபோது கைது செய்யப்பட்டார். ஜனவரி 12ஆம் தேதிவரை அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!