Latestஇந்தியாஉலகம்மலேசியா

சாம்பார் ருசியாக இல்லை; மனைவியை கழுத்து நெறித்து கொன்ற கணவன்!

கர்நாடகா, மே 5- சாம்பாரை சுவையாக சமைக்காததால், கர்நாடகாவிலுள்ள பாகல்கோட் மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயது கணவன் தனது 19 வயது இளம் மனைவியை ஆத்திரத்தில் கொலை செய்துள்ளான்.

இதனிடையே, வெவ்வேறு சமூகத்தைச் சார்ந்த இவர்களின் திருமணத்தை முதலில் எதிர்த்த பெற்றோர்கள், பின்பு அவர்களை ஏற்றுக்கொண்டது விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

திருமணமான சிறிது நாட்களிலேயே, தொட்டதுக்கெலாம் குறிப்பாக, மனைவியின் சமையல் ருசி இல்லை என்று கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இந்நிலையில், சம்பவத்தன்று மனைவி சமைத்த சாம்பாரை சாப்பிட்டு, ஆத்திரமுற்ற கணவன் தன் மனைவியை கழுத்து நெறித்து கொன்றுள்ளான்.

தலைமறைவாக இருந்த கணவனை போலிசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் அவ்வட்டார மக்களை பெரும் அதிர்ச்சிக்குளாக்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!