Latestமலேசியா

கோப்பேங் – சிம்பாங் பூலாய் சாலையில் 7 வாகனங்களை உட்படுத்திய விபத்தில் இருவர் மரணம்

கோலாலம்பூர், பிப் 3 – நான்கு கார்கள் மற்றும் மூன்று டிரேலர்கள் விபத்திற்குள்ளானதைத் தொடர்ந்து இரண்டு லோரி ஓட்டுனர்கள் மாண்டனர். கோப்பேங்கிலிருந்து சிம்பாங் பூலாய்க்கு செல்லும் சாலையில் 288. 1ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அந்த விபத்தினால் சாலையின் இரு பகுதியிலும் போக்குவரத்து நிலை குத்தியது. இன்று காலை மணி 7.45 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் போலீஸிடம் ஒப்படைக்கப்பட்டதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் துணைய இயக்குனர் சபரோசி நோர் அகமட் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். அந்த விபத்தில் கார் ஓட்டுனர் ஒருவர் கை முறிவுக்கு உள்ளானர். சீனி மற்றும் உலோகப் பொருட்களை இரு லோரிகள் ஏற்றி வந்த இரு லோரிகளும் விபத்திற்குள்ளாகின.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!