மலாக்கா, நவம்பர் 10 – கடந்த மாதம் தங்கும் விடுதி ஒன்றில், ஐநூற்று 85 ரிங்கிட் பெருமானமுள்ள, தலையணை துண்டு உட்பட மேலும் சில பொருட்களை திருடிய வேலையில்லா ஆடவன் ஒருவனுக்கு, நான்கு மாதங்கள் சிறைத் தண்டனையும், ஆயிரம் ரிங்கிட் அபராதமும் விதித்து மலாக்கா மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
30 வயது ங் ஜுயூன் லோங் எனும் அந்த ஆடவன், தமக்கு எதிரான குற்றச்சாட்டை ஒப்புக் கொண்டதை அடுத்து, நீதிமன்றம் அந்த தண்டனையை விதித்தது.
கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி, பிற்பகல் மணி 1.30 வாக்கில், மலாக்கா தெங்ஙாவிலுள்ள, தங்கும் விடுதி ஒன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்துள்ளான்.
அவ்வாடவனின் சிறைத் தண்டனை நவம்பர் மூன்றாம் தேதி அவன் கைதுச் செய்யப்பட்ட நாளிலிருந்து தொடங்கிய வேளை ; அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவன் கூடுதலாக ஒரு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டுமென மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.