பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 3 – சிலாங்கூர், லெம்பா சுபாங், தாமான் புத்ரா டமாய்யில், வீட்டின் வரவேற்பு அறையில் இருந்த “சோபாவில்” சிறுநீர் கழித்த தனது மூன்று வயது மகனுடன், மனைவியையும் சேர்த்து தாக்கியதாக நம்பப்படும் ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
கடந்த ஞாயிற்றுகிழமை, காலை மணி 11.50 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
சோபாவில் சிறுநீர் கழித்த சிறுவனின் செயலால் சினமடைந்த அவ்வாடவன் மகனுடன், மனைவியையும் சேர்த்து தாக்கியதாக கூறப்படுகிறது.
அதனால், காயமடைந்த மனைவியும், மகனும் செய்த புகாரை அடுத்து, கடந்த திங்கட்கிழமை கைதுச் செய்யப்பட்ட அவ்வாடவன், வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருப்பதை, பெட்டாலிங் ஜெயா போலீஸ் தலைவர் அசிஸ்டன்ட் கமிஷனர் முகமது ஃபக்ருதீன் அப்துல் ஹமீது உறுதிப்படுத்தினார்.
அவ்வாடவனுக்கு எதிராக குற்றவியல் சட்டம், குடும்ப வன்முறை சட்டம் மற்றும் சிறார் சட்டங்களுக்கு கீழ் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.