பாரிஸ், டிச 5 – தெற்கு பாரிஸ் புறநகர் பகுதியில், சிறு ரக விமானம் ஒன்று அடுக்குமாடி குடியிறுப்பின் தோட்டப் பகுதியில் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதில் அந்த விமானத்தில் பயணம் செய்த மூவர் 80 வயது விமான பயிற்றுனர் மற்றும் 20 வயது மதிக்கத்தக்க இதர இருவரும் சொற்ப காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் யாரும் இவ்விபத்தில் காயமடையவில்லை.
இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறினால் அந்த விமானம் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் சுவரில் மோதி விபத்துக்குள்ளாகி பின் தரையிறங்கியது.
கட்டிட சுவரில் மோதியதில் அதன் வால் பகுதி, தனியாக உடைந்து விழுந்ததோடு, விமானத்தின் ஒரு பகுதி கட்டிடத்தின் கூரை மேல் கண்டெடுக்கப்பட்டது.
இவ்விபத்து குறித்த விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.