ஜோகூர் பாரு, ஜன 12 – பத்து பஹாட் மற்றும் சிகாமாட்டில் குடிநுழைவுத்துறை மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் நான்கு நாடுகளைச் சேர்ந்த 16 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறையின் இயக்குனர் பஹாருதீன் தாஹிர் தெரிவித்திருக்கிறார். பத்து பஹாட் மற்றும் சிகாமாட்டில் பல இடங்களில் முறையான ஆவணங்கள் அல்லது வேலை பெர்மிட் இன்றி வெளிநாட்டினர் வேலை செய்து வருவதாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
மியன்மாரைச் சேர்ந்த எண்மர், இரு இந்தோனேசியர்கள், இரு வியட்னாமியர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். 20 முதல் 37 வயதுடைய எட்டு பெண்கள் மற்றும் எட்டு ஆடவர்களும் கைது செய்யப்பட்டதாக பஹாருதீன் கூறினார்.