Latestமலேசியா

நாட்டிலுள்ள சிறைகளில் இருக்கும் கைதிகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிக நெரிசலாக உள்ளது

கோலாலம்பூர், ஜன 17 – நாட்டிலுள்ள சிறைச்சாலைகள் தற்போது அதிக நெரிசலை எதிர்நோக்கியுள்ளன. நாடு முழுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் 71,000 கைதிகள் மட்டுமே தங்கியிருக்க முடியும். ஆனால் தற்போது சுமார் 75,000 கைதிகள் இருப்பதால் சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகமாக உள்ளது. நாட்டிலுள்ள 60 சிறைச்சாலைகளிலும் தங்கியிருக்கக்கூடிய கைதிகளின் கொள்ளளவைவிட 5.6 விழுக்காடு கைதிகள் அதிகமாக இருப்பதாக சிறைத்துறையின் தலைமை இயக்குனர் நோர்டின் முகமட் தெரிவித்திருக்கிறார். இதுதவிர தற்போது மறுவாழ்வு , பரோல், அனுமதிக்கப்பட்ட கைதிகளின் விடுதலை போன்ற திட்டங்களில் இடம்பெற்றுள்ள குறைந்தது 4,000 த்திற்கும் மேற்பட்ட கைதிகள் இந்த எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை என்றும் நோர்டின் முகமட் கூறினார்

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!