Latestஉலகம்

ஆடம்பர கைகடிகாரத்தை வைத்திருந்த அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்; ஜெர்மனியில் கைது

முயூனிக், ஜனவரி 19 – விலை உயர்ந்த ஆடம்பர கை கடிகாரத்தை அறிவிக்க தவறியதற்காக, பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், ஜெர்மனி, முயூனிக் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக, அந்நாட்டு சுங்கத் துறை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஆஸ்திரியாவை சேர்ந்த நடிகரும், கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுனருமான 76 வயது அர்னால்ட், கடந்த புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து ஜெர்மனி சென்றடைந்த போது, விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அர்னால்ட் விரைவில் தனது பயணத்தை தொடர அனுமதிக்கப்படலாம். எனினும், அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடிகாரம் திரும்ப தரப்படாது என சுங்கத் துறை பேச்சாளர் தெரிவித்தார்.

அதோடு, வரி ஏய்ப்பு செய்ததற்காக, “டெர்மினேட்டர்” நட்சத்திரமும், முன்னாள் உடல்கட்டழகு ஜாம்பவானுமான அர்னால்ட்க்கு எதிராக, கிரிமினல் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட கைகடிகாரத்தை, நிதி திரட்டும் நோக்கத்திற்காக அர்னால்ட் ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்க திட்டமிட்டிருந்ததால், அதற்கு அவர் வரி செலுத்தி இருக்க வேண்டுமென கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!