Latestமலேசியா

சிரம்பான் அருகே நீர் தேக்க குளத்தினுள் உப்பிய நிலையில் ஆடவரின் சடலம்

சிரம்பான், அக்டோபர்-17, சிரம்பான் அருகே வடக்குத் தெற்கு நெடுஞ்சாலையின் 240.8-வது கிலோ மீட்டரில் உள்ள நீர் தேக்க குளத்தில் ஓர் ஆடவரின் சடலம் பொது மக்களால் கண்டெடுக்கப்பட்டது.

உடல் உப்பிப் போயிருந்ததை வைத்துப் பார்க்கும் போது, 20 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் இறந்து சில நாட்கள் ஆகியிருக்கலாமென போலீஸ் சந்தேகிக்கிறது.

போலீஸ் அவ்வுடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியது.

அந்நபரின் தலையில் காயமேற்பட்டிருந்தது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டது.

மற்றபடி குற்ற அம்சங்கள் எதுவும் உடலில் காணப்படாததால், அவர் குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாமென நம்பப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் தெரிந்தோர் அருகிலுள்ள போலீஸ் நிலையங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!