Latestமலேசியா

சிரம்பானில், தம்மை கற்பழித்ததாக குற்றம்சாட்டிய மகளை அடித்து உதைத்த தந்தை; குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்

பெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 1 – சொந்த மகளை கற்பழித்ததாக தமக்கு எதிராக சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை மறுத்து தந்தை ஒருவன், நெகிரி செம்பிலான், சிரம்பான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று விசாரணை கோரினான்.

47 வயதான அந்த ஆடவன், 16 வயதே ஆன தனது மகளை கற்பழித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 12-ஆம் தேதி, ரெம்பாவிலுள்ள, வீடொன்றில் அவன் அக்குற்றத்தை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், மதுபோதையில் இருந்ததால், தாம் அந்த வேண்டத்தகாத செயலை செய்ததாக கூறி அவ்வாடவன் மன்னிப்புக் கோரினான்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், எட்டாண்டுகளுக்கு குறையாத 30 ஆண்டுகளுக்கு மேற்போகாத சிறைத் தண்டனையும், பத்துக்கும் குறையாத பிரம்படிகளும் விதிக்கப்படலாம்.

அவனை இன்று உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்க நீதிமன்றம் மறுத்துவிட்ட வேளை ; இவ்வழக்கு விசாரணை மார்ச் ஆறாம் தேதி செவிமடுக்கப்படும்.

முன்னதாக, தந்தையால் பெண் ஒருவர் கடுமையாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலான வேளை ; சொந்த தந்தையால் தாம் கற்பழிக்கப்பட்டதாக அப்பெண் குற்றம்சாட்டி இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!