Latestமலேசியா

4 மாநிலங்களில் வெள்ளத்தின் காரணமாக 6,000த்திற்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

கோலாலம்பூர், டிச 18 – கிளந்தான், சிலாங்கூர், திரெங்கானு மற்றும் பேரா ஆகிய நான்கு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இதுவரை 6,000த்திற்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் 30 நிவாரண மையங்களில் தங்கியிருக்கின்றனர். கிளந்தானில் பாசிர் மாஸ் மற்றும் தானா மேராவில் உள்ள 17 நிவாரண மையங்களில் மொத்தம் 5,327 பேர் தங்கியுள்ளனர். நேற்றிரவு அங்குள்ள நிவாரண மையங்களில் 4,840 பேர் மட்டுமே தங்கியிருந்தனர்.

திரெங்கானுவில் 10 நிவாரண மையங்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை 812 பேராக குறைந்தது. டுங்குன், மாராங் மற்றும் செட்டியு ஆகிய மூன்று மாவட்டங்களும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. சிலாங்கூரில் உள்ள இரண்டு நிவாரண மையங்களில் 43 பேரும், பேராவில் 89 பேரும் நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!