கோலாலம்பூர், ஜன 11 – வெளிநாட்டு கல்லூரி மாணவி ஒருவரை சிலாங்கூர் அம்பாங்கில் செவ்வாய்க்கிழமையன்று கற்பழித்ததன் தொடர்பில் போலீஸ்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டார். போக்குவரத்து குற்றத்திற்காக புக்கிட் அம்பாங்கில் இரவு மணி 10.09 அளவில் சீருடை அணிந்த இரண்டு போலீஸ்காரர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணையும், மலேசிய மாணவரையும் கைது செய்ததாக சிலாங்கூர் போலீஸ் தலைவர் ஹுசைன் ஒமர் கான் தெரிவித்தார். அதன் பிறகு அந்த போலீஸகாரர்கள் சம்பந்தப்பட்ட கல்லூரி மாணவியையும் , மலேசிய மாணவரையும் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டுச் சென்றனர். அங்கு போலீஸ்காரர்களில் ஒருவர் அந்த மாணவியை கற்பழித்துள்ளார் என ஹுசைன் தெரிவித்தார்,
மற்றொரு போலீஸ்காரர் மலேசிய மாணவரை ஒரு வங்கிற்கு அழைத்துச் சென்று அங்கு பணத்தை மீட்கவேண்டும் என்றும் அப்போதுதான் போக்குவரத்து குற்றத்திற்கு பணம் செலுத்த முடியும் என்று தெரிவித்ததாக ஹுசைன் கூறினார்.