Latestமலேசியா

சிலாங்கூரில் திடீர் வெள்ளம்; 1,968 பேர் 6 வெள்ள நிவாரண மையங்களில் தஞ்சம்

ஷா ஆலாம், அக்டோபர்-4 – சிலாங்கூரில் நேற்றிரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 3 மாவட்டங்களில் 480 குடும்பங்களைச் சேர்ந்த 1,968 பேர் 6 தற்காலிக துயர் துடைப்பு மையங்களுக்கு மாற்றப்பட்டனர்.

ஷா ஆலாம், கோம்பாக், குவாலா சிலாங்கூர் ஆகியவையே பாதிக்கப்பட்ட மாவட்டங்களாகும்.

பாதிக்கப்பட்ட மக்களை அவர்களின் இருப்பிடங்களிலிருந்து மீட்கும் பணிகளில் 54 தீயணைப்புமீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டனர்.

Kampung Kubu Gajah, Merbau Sempah, Kampung Melayu Subang என வெள்ளமேறிய 21 பகுதிகளிலும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டதாக, சிலாங்கூர் தீயணைப்புமீட்புத் துறையின் உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.

Kampung Selayang Baru, Kampung Laksamana, செலாயாங் இந்தியர் குடியிருப்பு (Indian Sattlement) உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்ட இடங்களாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!